உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு அடுத்த வாரம் ஆரம்பம்!

Friday, February 8th, 2019

2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக 65,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பெறுபேறுகளை மீளாய்வு செய்யும் நடவடிக்கை அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித்த தெரிவித்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற உயர் தர பரீட்சையில் 7,21,469 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: