புதிய அரசியல் அமைப்பு தயாரிப்பு தொடர்பில் கருத்தரங்கு!
Tuesday, March 21st, 2017புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பது குறித்து திருகோணமலை மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டமாக, திருகோணமலை மாவட்ட செயலத்தில் இது இன்று இடம்பெறவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் களுத்துறை மாவட்ட கருத்தரங்கு நேற்று மத்துகம பிரதேசசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கான தெளிவுபடுத்தலோடு ஆரம்பமான இந்த செயற்றிட்டம் இதுவரை ஆறு மாவட்டங்களில் நிறைவடைந்துள்ளது.
Related posts:
இலச்சினையில் பனையும் வீணையும் என இருந்தால் மட்டும் போதாது: பனை வளத்தையும் அதனை நம்பிவாழும் மக்களின்...
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
குடிநீர் திட்டங்களை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க நடவடிக்கை!
|
|