வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் – சிகிச்சை பலனின்றி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!
Tuesday, March 12th, 2024யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
காரைநகருக்கு சென்று, வட்டுக்கோட்டை பகுதிக்கு திரும்பும் போது, கார் ஒன்றில் பயணித்த சிலரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, காயமடைந்தவர் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில். வட்டுக்கோட்டை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
முன்விரோதம் காரணமாக குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சமூக வலைத்தளங்களில் இனவாதம் பரப்பினால் கடும் நடவடிக்கை!
எதிர்வரும்14 ஆம் திகதி நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய மஹோற்சவம் ஆரம்பம்!
இ.போ.சபை ஊழியர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்!
|
|
குமுதினி படகில் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவு தூபிக்கு ஈ.பி.டி.பியின் உயர் மட்ட முக்கியஸ்தர்கள்...
சட்ட வரைபில் உள்ள குழப்பங்களை நீக்கிகப்பட்டு விரைவில் மாகாண சபைத் தேர்தலை -துறைசார் தரப்பினருக்கு ஜன...
ஊரடங்கு நீக்கப்பட்டாலும் பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானம் – இராணுவத் தளபதி தெ...