வடமாகாணத்தின் சில பகுதிகளில் மின்தடை!

Saturday, November 18th, 2017

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமையும், நாளை மறுதினம் திங்கட்கிழமையும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை ஞாயிற்றுக்கிழமை(19) காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியாவின் சாளம்பைக் குளம் பிரதேசத்திலும், நாளை காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை மன்னார் திருக்கேதீஸ்வரம் பிரதேசத்திலும்,

நாளை மறுதினம் திங்கட்கிழமை(20) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். மாவட்டத்தின் சில்லாலை, சாந்தை ஆகிய பகுதிகளிலும்,

அதே தினம் காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் கரைகட்டுக் குளம் பகுதியிலும்,

காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் நெளுக்குளத்திலிருந்து பம்பைமடு வரை, சாளம்பைக் குளம் பிரதேசம், நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரி, பம்பைமடு பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளிலும்,

காலை- 08 மணி முதல் மாலை-05.30 மணி வரை மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வரம் பிரதேசத்திலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: