வடமராட்சி கிழக்கில் தே.அ.அட்டை வழங்குவதற்கான துரித செயற்பாடுகள்!

Wednesday, March 21st, 2018

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் வசிக்கும் மக்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் இல்லாத குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் துரிதமாக செயற்பட்டு வருகின்றனர்

கிராம அலுவலர் பிரிவுகள் ரீதியாகச் நேரடியாகச் சென்று இத்தகைய குறைபாடுகள் இருப்பவர்களை சந்தித்து தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதில் அவரிற்கு இருக்கின்ற இடையூறுகளை கேட்டறிந்து அதற்கான  வழிகாட்டல்களை வழங்குவதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான ஊக்குவிப்பினை வழங்கி வருகின்றனர்

கடந்த வாரம் போக்கறுப்பு கிராம அலுவலர் பிரிவில் இத்தகைய சேவை இடம் பெற்ற போது நீண்ட காலமாக தேசிய அடையாள அட்டை விண்ணப்பிப்பதில் இவர்களுக்கு இருந்து வந்த இடையூறு அவதானிக்கப்பட்டு அதற்காண தீர்வுகளை வழங்கி தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் ஆட் பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்புவதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் கையேற்கப்பட்டன இதே போல சகல பதிவுகளும் மேற் கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளின் மூலம் இப் பிரதேச செயலர் பிரிவில் தேசிய அடையாள அட்டைப் பிரிவினரால் தெரிவிக்கப்படுகின்றது

Related posts: