மருந்துகளின் விலைகள் தொடர்பில் தீர்மானம் – தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை!

Monday, January 13th, 2020


22 வகையான மருந்துப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை தீர்மானத்திற்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அந்தவகையில் இதுவரை 70 வகையான மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்..

அத்துடன் குறித்த விலை குறைப்பிற்கு எதிர்வரும் நாட்களில் சுகாதார அமைச்சரின் அனுமதி கிடைக்கப்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக மேலும் கூறப்பட்டுள்ளது.

Related posts: