வடக்கு தொடருந்து பாதை சீரானது – தொடருந்து சேவையும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு மையம் தெரிவிப்பு!

Wednesday, October 5th, 2022

தொடருந்து ஒன்று தடம்புரண்டமையால், வடக்கு மார்க்கத்தில் தொடருந்து சேவைக்கு ஏற்பட்டிருந்த பாதிப்பு தற்போது சீராக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

முன்பதாக சரக்குகளை ஏற்றிச்செல்லும் தொடருந்து, வெல்லவ பகுதியில் நேற்றிரவு தடம்புரண்டது.

இதன்காரணமாக, காங்கேசன்துறைமுதல் கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த தொடருந்து சேவை, மஹவ தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

அத்துடன், கொழும்பு – கோட்டையிலிருந்து வடக்கு நோக்கி பயணிகத்த தொடருந்து சேவையும் குருநாகல் வரையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வடக்கு தொடருந்து சேவை தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: