செப்ரொம்பர் முதலாம் திகதிமுதல் அனைத்து பாடசாலைகளையும் வழக்கம் போல பராமரிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
Friday, August 21st, 2020கொரோனா பரவுவதால் நாடு முழுவதிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் மேற்கொண்ட வேலைத் திட்டத்தை இடைநீக்கம் செய்யத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செய லாளர் அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில் அடுத்த மாதம் முதலாம் திகதிமுதல் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் வழக்கம் போல பராமரிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் அனைத்து மாகாணங்களினதும் கல்வி செயலாளர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.
அதன்படி, திட்டமிட்ட கால அட்டவணையின்படி பாடசாலை நடவடிக்கை களைக் காலை 7.30 மணிமுதல் மதியம் 1.30 மணி வரை மட்டுமே நடத்து மாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவிட் ௲ 19 கொரோனா வைரஸ் தொற்று பரவுவதால், தற்போது சில வகுப்புகள் பிற்பகல் 3.30 மணி வரை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.
Related posts:
புதிய பேருந்து கட்டணம் இன்று வெளிவரும்?
விரைவில் எல்லை நிர்ணய அறிக்கை கையளிக்கப்படும்.!
அடைமழை தொடரும் - அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!
|
|