இரண்டாம் உலக யுத்த கால கப்பல் இலங்கை கடற்படையினரால் மீட்பு!

Monday, April 2nd, 2018

இரண்டாவது உலக யுத்தத்தின் போது திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூழ்கிய பிரிட்டிஷ் கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்றை இலங்கை கடற்படை நீர்மூழ்கிப் பிரிவினர்மீட்டெடுத்துள்ளனர்.

இந்தக் கப்பலை 75 வருடங்களின் பின்னர் இலங்கை கடற்படை நீர்மூழ்கிப் பிரிவினரால் மீட்டெடுக்க முடிந்துள்ளது.

138 அடி நீளத்தைக் கொண்ட இந்தக் கப்பல் சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பலாக 1924ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி வெள்ளோட்டம் விடப்பட்டது.

குறித்த கப்பல் 1942ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த வேளையில் ஜப்பான் விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில்தீப்பற்றிக் கொண்டது. அதனால் இந்தக் கப்பல் கைவிடப்பட்டது.

1943ஆம் ஆண்டு வள்ளங்களுக்கு இறங்குதுறையாக பயன்படுத்துவதற்கான வகையில் இதனை மூழ்கடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருகோணமலை துறைமுகத்தில் வசதிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் கீழ், மூழ்கியிருந்த இந்தக் கப்பலை 5 மாத முயற்சியின் பின் மீட்டுள்ளனர். இதற்கு டோக்கியோ சீமெந்துதொழிற்சாலை ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.

Related posts: