கோர விபத்து – இத்தாவில் பகுதியில் இருவர் பலி!
Thursday, July 4th, 2019
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் மரக்கறிகள் ஏற்றி யாழ் நோக்கி பயணித்த லொறி ஒன்றும் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே லொறி சாரதியும் டிப்பர் வாகன சாரதியும் உயிரழந்துள்ளனர்.
இதுதொடர்பான மேலதிக விசாரணையினை பளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் முதற்கட்ட விசாரணையில் லொறியினை செலுத்திவந்த சாரதி மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளதாக பளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கூறினர்.
Related posts:
மருந்துப் பொருட்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதார அமைச்சர்!
தராசுகளில் மோசடி செய்த 59 வர்த்தகர்களுக்கு வழக்கு!
அதிக விலைக்கு மணலை விற்பனை செய்தால் வாகன உரிமையாளர்களின் உரிமங்கள் இரத்து - புவிச் சரிதவியல் அளவை மற...
|
|
|


