உடல் உறுப்புக்களை தானம் செய்ய முனவாருங்கள் – பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரிக்கை!

Thursday, January 11th, 2024

உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வருமாறு பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

உடல் உறுப்புக்களை தானம் செய்வதனால் பல உயிர்களை பாதுகாக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழக்கும் நோயாளிகளின் அத்தியாவசியமான உடல் பாகங்களை தானம் செய்வதனால் அவற்றை வேறு நபர்களுக்கு பொருத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுப்பு மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ளும் விசேட பிரிவொன்று பேராதனை வைத்தியசாலையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நோய் நிலைமைகளினால் உயிரிழப்போரின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வருமாறு வைத்தியசாலையின் மருத்துவர்கள் கோரியுள்ளனர்.

கல்லீரலைக் கூட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் தற்பொழுது பேராதனை வைத்தியசாலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

000

Related posts:

அரசியல் அரங்கில் தமிழ் சக்திகளை ஒன்றிணைக்கும் செயற்பாடுகளுக்கு ஈ.பி.டி.பி தொடர்ந்தும் வலுச்சேர்க்கும...
உள்ளூராட்சித் திணைக்கள முன்பள்ளிகளில் தற்காலிகமாக பணியாற்றிய ஆசிரியர் பலர் நிரந்தர நியமனத்தை இழந்தனர...
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு!

தனியார் மருந்தகங்களை விட அரச மருத்துவமனைகளின் நிலை மோசமானது - ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பி...
கடந்த அரசாங்கத்தால் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு தவறானது - இராஜாங்க அமைச்சர...
சேதனப்பசளைத் திட்டத்ததால் இவ்வருட இறுதிக்குள் விவசாயிகளுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் – ஈ.பி.டி...