வடக்கில் 4 பூங்காக்களை புதிதாக அமைக்க நடவடிக்கை!

வடமாகாணத்தில் புதிதாக 4 பூங்காக்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எஸ்.கே. பத்திரண தெரிவித்துள்ளார்.
இப் பூங்காக்களை அமைப்பதற்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஈகிய மாவட்டங்களில் காணிகளை தெரிவு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். தற்போது நாட்டில் 22 தேசிய பூங்காக்கள் இருக்கின்றன். அத்துடன் புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த 4 பூங்காக்களுடன் மொத்தமாக 26 பூங்காக்களை முன்னெடுத்து செல்வதற்கு தற்போதுள்ள 900 ஊழியர்கள் எண்ணிக்கை போதுமானதாகயில்லை. எனவே மேலும் 1500 ஊழியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவையின் அங்கீகாரத்தை எதிர்பார்த்திருப்பதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் 68 இலட்சம் வருமானம்!
மின் உற்பத்தியை விஸ்தரிக்க நடவடிக்கை!
கார் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 2 பேர் உயிரிழப்பு!
|
|