வடக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்றுறுதி – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Thursday, April 29th, 2021

வடக்கில் மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 660 பேரின் மாதிரிகள் புதன்கிழமை பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதில் 13 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் கரவெட்டி, வேலணை மற்றும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தலா ஒருவருக்கும் சுயதனிமைப்படுத்தலில் இருந்த 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கும், வெளிநோயாளர். பிரிவில் சிகிச்சை பெற வந்த ஒருவருக்கும் என இரண்டு பேருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக் கைதிகள் இருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வவுனியா செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: