வறுமையில் வாழும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு  ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் உதவி!

Saturday, August 18th, 2018

புனர்வாழ்வழிக்கப்பட்ட நிலையில் வறிய நிலையில் வாழும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் தனது மாநகரசபை உறுப்பினர் பதவிக்கான இம்மாதத்திற்குரிய மாதாந்தக் கொடுப்பனவையும் லோரன்ஸ் பாஸ்கரன் என்ற முன்னாள் போராளிக்கு வழங்கிவைத்துள்ளார்.

யாழ் மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களும் தத்தமது பங்களிப்பை ஓரளவேனும் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் யாழ் மாநகர சபையின் கன்னி அமர்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மற்றுமொரு மாநகரசபை உறுப்பினர் றீகன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அது சபையில் எற்றுக்கொள்ளப்படாதிருக்கும் நிலையில் சுயதொழிலுக்கான முதலிடுகள் இன்றி தமது குடும்பத்தை கொண்டு செல்லமுடியாத நிலையில் வாழ்ந்துவந் லோரன்ஸ் பாஸ்கரன் என்ற  முன்னாள் போராளி ஒருவருக்கு கடற்றொழில் செய்வதற்கான பொருட்களை தனது இம்மாதக் கொடுப்பனவில் கொள்முதல் செய்து றெமீடியஸ் வழங்கிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

bandicam 2018-08-18 15-51-26-480

Related posts:

கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களை அச்சுறுத்தினால், அவர்களுக்கு எதிராக சட்டத்தினை கடுமைய...
சவாலான காலங்களில் உதவிய உண்மையான நண்பன் இந்தியா - இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட...
அரசியல்வாதிகளுக்கும் ஏனையவர்களுக்கும் தேவையற்ற வகையில் வழங்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரைவில் ...

அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது - அரச அச்சகம் அறிவிப...
நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்பட்டால் அணுவாயுதங்களை பயன்படுத்துவோம் – ரஸ்யா அதிரடி அறிவிப்பு!
அதிகார பரவலாக்கம் குறித்து டிசம்பர் 11 இன் பின்னர் சர்வகட்சி கலந்துரையாடல் - ஜனாதிபதி ரணில் விக்ரமசி...