வடக்கிற்கு புதிய பொருளாதார திட்டம் – அபிவிருத்தியின் வேகம், மக்களின் அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
Sunday, February 12th, 2023நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் பொருளாதார அபிவிருத்தியின் வேகம், மக்களின் மனப்பாங்கு மற்றும் அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்கு முன்னர் வடமாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த வலுவான பொருளாதாரத்தை வடக்கில் மீண்டும் ஏற்படுத்தத் தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
வடமாகாண பிரச்சினைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று (10) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் வடமாகாண அரசியல் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்!
திடீர் உயர் அழுத்த மின் காரணமாக பழுதடைந்த பொருள்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி மக்கள் மின்சார சபைக்கு...
வரிக்கொள்கைக்கான தீர்வு வரை பணிகளை ஆரம்பிக்க போவதில்லை - விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவிப்பு!...
|
|