முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் உதவி!
Sunday, December 16th, 2018சமூகத்தில் வறிய நிலையில் வாழும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் தனது மாநகரசபை உறுப்பினர் பதவிக்கான இம்மாதத்திற்குரிய மாதாந்தக் கொடுப்பனவையும் செபஸ்ரியாம்பிள்ளை நியூட்டன் என்ற முன்னாள் போராளிக்கு வழங்கிவைத்துள்ளார்.
யாழ் மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களும் தத்தமது பங்களிப்பை ஓரளவேனும் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் யாழ் மாநகர சபையின் கன்னி அமர்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மற்றுமொரு மாநகரசபை உறுப்பினர் றீகன் கோரிக்கை விடுத்திருந்தார்
ஆனாலும் குறித்த முன்மொழிவு சபையில் ஏற்றுக்கொள்ளப்படாது போன நிலையிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் றெமீடியஸ் வறிய நிலையில் வாழும் முன்னாள் போராளிகள் பலர் சுயதொழிலுக்கான முதலிடுகள் இன்றி தமது குடும்பத்தை கொண்டு செல்லமுடியாத நிலையில் வாழ்ந்துவருவதை கருத்தில்கொண்டு அவர்களது வறுமை நிலையை ஓரளவேனும் நிவர்த்திசெய்யும் முகமாக தனது மாதாந்த கொடுப்பனவை வழங்கிவரகின்றார்.
இந்நிலையில் அவர் தனது இம் மாதத்துக்குரிய கொடுப்பனவை இரண்டு மாவீரர்களின் சகொதரரும் முன்னாள் போராளியுமாகிய செபஸ்ரியாம்பிள்ளை நியூட்டன் என்பவருக்கு அவரத சுயதொழிலக்காக கடற்றொழில் உபகரணங்களை வழங்கிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
Related posts:
|
|