வடக்கின் கல்வித்துறையில் குறைகேள் விசாரணைக் குழு!

வட மாகாணத்தின் கல்வித்துறையில் குறைகேள் விசாரணைக் குழுவொன்றினை அமைப்பதற்கு ஆளுநர் சுரேன் ராகவன் தீர்மானித்துள்ளார்.
வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும் பால்நிலை சமத்துவம் இல்லாமை தொடர்பிலும் ஆளுநரின் கவனத்திற்கு அதிகளவான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு விசாரணைக் குழுவொன்றினை ஸ்தாபிக்க ஆளுநர் தீர்மானித்துள்ளார்.
மூன்று பேரடங்கிய குறித்த விசாரணைக் குழுவில் இரு பெண்கள் உள்ளடக்கப்படவுள்ளதுடன் அதில் ஒருவர் முறைப்பாட்டாளர்களினால் முன்மொழியப்பட்டவராகவும் இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
ஓய்வு பெறவுள்ள பிரதம நீதியரசரின் சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு!
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே ஒக்டோபர் மாதத்தின் நிலைமையை தீர்...
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடனுக்கு அடுத்த மாதம் அனுமதி - மத்திய வங்கியின் ஆளுநர் நந்...
|
|