லம்ப்டா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!
Saturday, July 10th, 2021லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், ஹேமந்த ஹேரத் பொதுமக்கள் இது தொடர்பில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
லம்ப்டா வைரஸ் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு மிகுந்த அவதானத்துடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த வைரஸ் பிறழ்விற்கான மாதிரிகளை தொடர்ந்தும் பரிசோதித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு நாட்டிற்குள் பரவாதிருப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை விமானங்களிலும் கலக்ஸி நோட்-7 பாவனைக்கு தடை!
ஐ.நாவின் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு - வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!
கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல்!
|
|