எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கொள்கலன்களை அகற்றும் நடவடிக்கை இம்மாத இறுதியில் முன்னெடுப்பு!

Wednesday, October 13th, 2021

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மற்றும் அதில் தீப்பற்றலுக்கு உள்ளான கொள்கலன்களை அகற்றும் நடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முற்பகுதியில் முன்னெடுக்கப்படும் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தினால் அதற்கான கேள்விபத்திரம் கோரப்பட்டுள்ளது.

இதற்கமைய, 8 நிறுவனங்கள் தற்போது கேள்வி பத்திரங்களை முன்வைத்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லகதபுர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: