மர்ம மனிதர்கள் அச்சுறுத்தல் : கடும் அச்சத்தில் மக்கள்!

Monday, March 4th, 2019

பதுளை – ஹாலிஎல பிரதேசத்திற்கு உட்பட்ட தோட்டங்களில் மர்ம மனிதர்கள் உலாவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இரவு வேளைகளிலும் பகல் வேளைகளிலும் இவர்கள் மக்களை அச்சுறுத்தி கொள்ளைச் சம்வங்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் ஹாலிஎல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் இந்த சம்வவம் அதிகரித்து வருவதாகவும், இரவு வேளைகளில் தோட்ட இளைஞர்கள் நித்திரை இன்றி காவல் காத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

மேற்படி பிரச்சினைக்கு யாரும் முடிவு பெற்று கொடுக்காதமையினால் தோட்ட மக்கள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷிடம் முறையிட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் உடனடியாக பொலிஸ்மா அதிபரிடம் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன், இரவு வேளைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது, பாதுகாப்பு பிரிவினர் ஊடாக தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: