லம்ப்டா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!
Saturday, July 10th, 2021
லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், ஹேமந்த ஹேரத் பொதுமக்கள் இது தொடர்பில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
லம்ப்டா வைரஸ் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு மிகுந்த அவதானத்துடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த வைரஸ் பிறழ்விற்கான மாதிரிகளை தொடர்ந்தும் பரிசோதித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு நாட்டிற்குள் பரவாதிருப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
O/L அனுமதி அட்டையில் மாற்றம் செய்ய வேண்டுமா? 29 வரை கால அவகாசம்!
இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவரக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து!
வேலையற்ற பட்டதாரிகளின் விண்ணப்ப வயதில்லை அதிகரிப்பு - ஜனாதிபதி ஊடகப் பிரிவு!
|
|
|
வேலணை பிரதேச செயலரின் இடமாற்றத்தை இடைநிறுத்துமாறு கோரி புங்குடுதீவு பொது அமைப்புகளால் அமைச்சர் டக்ளஸ...
இன்றிரவு 10 மணிமுதல் 30 மணிநேர நடமாட்ட முடக்கம் - மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை என இராணுவத் த...
சில துறைகளுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகிக்க அனுமதி - நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவிப்ப...


