ரயில் நிலையங்களில் Wi-Fi வலயங்களை நிறுவ தீர்மானம்!
Tuesday, June 18th, 2019நாடு முழுவதுமுள்ள 53 ரயில் நிலையங்களில் 89 Wi-Fi வலயங்களை நிறுவுவதற்கு இலங்கையின் முன்னணி இணைய சேவை வழங்குநர்கள் தீர்மானித்துள்ளதாக, கொள்கை அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் 44 Wi-Fi வலயங்கள் நிறுவப்படவுள்ளதுடன், அவற்றில் 22 Wi-Fi வலயங்கள் கொழும்பு மாவட்டத்தில் 14 ரயில் நிலையங்களில் நிறுவவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், குறித்த இந்த திட்டத்தில் சப்ரகமுவ மாகாணத்தில் ரம்புக்கணை ரயில் நிலையம் உள்வாங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி மாவட்டத்தில் 3 ரயில் நிலையங்களும் வடமேல் மாகாணத்தில் 5 ரயில் நிலையங்களும் பதுளை மாவட்டத்தில் 5 ரயில் நிலையங்களும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ் மாநகரின் முன்னாள் ஆணையாளரது ஊழலும் அம்பலப்படுத்தப்பட வேண்டும் - றெமீடியஸ்!
கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்போருக்கு புதிய சோதனை - தேசிய போக்குவரத்து மருத்துவ ஆராய்ச...
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு முறை குறைக்கப்படும் - வர்த்தக மற்றும் உணவுப் பாது...
|
|