யாழ்/ வேலணை மத்திய கல்லூரியில் டெங்கு ஒழிப்பை முன்னிட்டு சிரமதானம்!

Saturday, January 7th, 2023

டெங்கு ஒழிப்பை நோக்காகக் கொண்டு சுற்றுச்சூழலை துப்புரவாகப் பேணும் வகையில் வேலணை மத்திய கல்லூரியில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது

நேற்றையதினம் பாடசாலையின் மாணவர்கள் ,பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் வேலணை பிரதேச சபையினர் இணைந்து குறித்த சிரமதானப் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

மாணவர்களின் கல்விச் மற்றும் இதர செயற்பாடுகளுக்கு இடையூறாக காணப்பட்ட பற்றைகள் மற்றும்’ நீர் தேங்கி நிற்கும் பகுதிகள் அடையாளங்காணப்பட்டு துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையால் நுளம்பின் தாக்கமும் கட்டுப்படுத்தப்பட்டு பாடசாலை பாடசாலை வளாகம் தூய்மையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: