யாழ் மாவட்டத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரத்தை கையாளும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை!

Wednesday, August 9th, 2023

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரத்தை கையாளும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவது தொடர்பாக ஆராயப்பட்டது.

குறிப்பாக தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் கொடிகாமம், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இல்லாமை சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாணம் பிராந்தியம் காங்கேசன்துறை பிராந்தியம் என 17 பொலிஸ் நிலையத்தில் 17 ஆண் பொலிஸாரும் 14 பெண் பொலிஸாருமாக மொத்தமாக 31 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-

முன்பதாக யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படும் சிறுவர் இல்லங்கள் தொடர்பாக உரிய கண்காணிப்பை மேற்கொள்ள யாழ் மாவட்ட செயலக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது. ஒரு சில சிறுவர் இல்லங்கள் மாவட்ட செயலக அதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதில்லை என சுட்டிக் காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: