யாழ் மாநகரின் மையப் பகுதி முடக்கம்?
Thursday, March 25th, 2021
யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் கோட்டைப் பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்படுகிறது.
யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கே.கே.எஸ். வீதி சத்திரச்சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படவுள்ளதுடன் வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றன.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மட்டும் 10 நாட்களுக்கு இடைநிறுத்தப்படுகின்றன.
மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதுடன் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் வீடுகளில் நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கப்படுகிறது. அத்துடன், உயிரிழந்தோரின் இறுதிக் கிரிகைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
|
|