விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தாமதமடைவதால் கல்வி உரிமை மீறப்படுகின்றது – மாணவர்கள் குற்றச்சாட்டு!
Friday, March 17th, 2023கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்த்தரப் பரீட்சைக்குரிய விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தாமதமடைவதால் மாணவர்களின் கல்வி உரிமை மீறப்படுகின்றது என மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்த்தர பரீட்சை கடந்த பெப்பிரவரி மாதம் 17 ஆம் திகதி நிறைவடைந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 22 ஆம் திகதி விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவிருந்தன.
எனினும் இதுவரை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படாமை மாணவர்களின் கல்வி உரிமையை மீறியுள்ளதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், குறித்த தாமதம் காரணமாக கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை தாமதமடைவதற்கும் சாத்தியம் உள்ளதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியானது!
பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை திறப்பது தொடர்பில் சுகாதார தரப்பினருடன் பேச்சுவார்த்தை - கல்வி அம...
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் குறித்த உண்மையை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவேன் - முன்னாள் பிரதமர்...
|
|