நாட்டில் கொரோனா மரணங்கள் 3 ஆயிரத்து 600 ஐ கடந்தது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, July 15th, 2021

நாட்டில் மேலும் 37 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, 18 ஆண்களும் 19 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 77 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 2 இலட்சத்து 53 ஆயிரத்து 14 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: