யாழ் மறைமாவட்ட ஆயரிற்கு புதிய பதவி!

Monday, July 1st, 2019

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் உபதலைவராக யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அமர்வு இடம் பெற்றபோது புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக பதுளை ஆயர் வின்ஸ்ரன் பர்னான்டோ ஆண்டகையும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் உபதலைவராக யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையும் நியமிக்கப்பட்டனர்.

இந்த உபதலைவர் பதவியைவிட இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி சமாதானம் மனித முன்னேற்ற பணிகளுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவராகவும் நிதித்துறை ஆணைக்குழவின் உபதலைவராகவும் துறவற உலக சபைகள் குருக்கள் குருமாணவர்களுக்கான தேசிய ஆணைக்குழவின் உபதலைவராகவும் லயனல் பி.இம்மானுவேல் அறக்கட்டளை நிதியத்தின் உபதலைவராகவும் யாழ் ஆயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts: