யாழ். போதனா மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு 7 ஆம் திகதி திறப்பு!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 600 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட விபத்து சிகிச்சைப்பிரிவு எதிர்வரும் மாதம் 7 ஆம் திகதி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இந்த விபத்து சிகிச்சைப் பிரிவில் 100 பேர் தங்கக்கூடிய கட்டில் வசதிகளுடன் 3 சத்திர சிகிச்சைக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் ஓர் அவசர சிகிச்சைக் கூடமும் இங்கே காணப்படும். இதன்மூலம் விபத்தில் காயமடையும் நோயாளர்கள் நேரடியாகவே இந்த விடுதியில் சேர்க்கப்படுவதோடு சாதாரண நோயாளர்கள் மற்றும் குணமடையும் நோயாளர்களும் நேரடியாகவே வெளியேறும் வசதிகளும் ஏற்படுத்தப்படும். எனத் தெரிவித்தார்.
Related posts:
வெளிநாடுகளில் மரணிக்கும் இலங்கையர் தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம்!
பொலிஸார் அதிரடி : குடாநாட்டில் 50 பேர் கைது!
வாடகை வீடுகளில் வாழும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு விலையில் நிரந்தர வீடு - அரசாங...
|
|
கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று - மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயப்பட வாய்ப்புள்ளதாக தகவல்!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வழமைக்குத் திரும்பியதும் வாகனங்கள் இறக்குமதி செய்ய...
5 ஆம் திகதிமுதல் தடையின்றிய மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் -...