அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வழமைக்குத் திரும்பியதும் வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் – நிதி அமைச்சின் செயலாளர்!

Monday, March 15th, 2021

இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள் போதிலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கை, இடைநிறுத்தப்பட மாட்டாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், இந்தத் திட்டத்தின் கீழ் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துவதற்கு, வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது எனவும் நிதி அமைச்சின் செயலாளர், எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

முன்பதாக கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கடந்த ஆண்டு மார்ச் மாதம்முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது.

இந்நிலையிலேயே, நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் மாத்திரம் இறக்குமதி செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வழமைக்குத் திரும்பியதன் பின்னர், ஏனைய வாகனங்களையும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ள நிதி அமைச்சின் செயலாளர் இது விடயம் குறித்து வாகன இறக்குமதியாளர்களுடன் தாம் கலந்துரையாடியதாகவும், இதன்போது அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்ததாகவும், தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: