யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா – சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆறுமுகம் கேதீஸ்வரன்!
Monday, May 17th, 2021
வட மாகாணத்தில் நேற்றையதினம் 55 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 642 பேரின் மாதிரிகள் நேற்று (16) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும் வவுனியா மாவட்டத்தில் 11 பேரும் மன்னார் மாவட்டத்தில் 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் 6 பேருக்கு கொவிட்-19 தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ் போதனா வைத்தியசாலையில் போராட்டம்!
குப்பை பிரச்சினைக்கு தீர்வு - பிரதமர்
பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வாவை நியமித்தார் ஜனாதிபதி!
|
|
|


