யாழ் நகரை அண்டியுள்ள பகுதிளிலும் சுகாதார நடைமுறைகளை கடுமையாக கண்காணிப்பு – சுகாதார அதிகாரிகளுக்கு வடமாகாண ஆளுநர் உத்தரவு!
Wednesday, March 31st, 2021கொரோனாத் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழின் நகர மத்தியை அண்மித்த முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுத்துள்ளமையால் பாதிப்பின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வரப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்..
தொடர்பில் கருத்து தெரிவித்த ஆளுநர் –
இது வரை 499 தொற்றாளர்களாக இனம் காணப்பட்டு அவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களுடன் தொடர்புடை சுமார் 1000 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேநேரம் 1000 பீ.சி.ஆர் மாதிரிகள் கொழும்புக்கும் 1000 மாதிரிகள் அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் நகரை அண்டியுள்ள பகுதிளிலும் சுகாதார நடைமுறைகளை கடுமையாக கண்காணிக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளதாவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|