யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!

Saturday, July 2nd, 2016

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை ஞாயிற்றுக் கிழமை(03) மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதன் படி நாளை காலை-8.30 மணி முதல் மாலை-5.30 மணி வரை மருதனார்மடம், ரொட்டியாலடி, மருதனார்மடம் யாழ். நுண்கலைப் பீடம், அம்பலவாணர் வீதி, பெரிய மதவடி, இலங்கை வங்கி முன் ஒழுங்கை, கோண்டாவில் இருபாலை வீதி, கோண்டாவில் பலாலி வீதி, கோண்டாவில் யாழ். வீதி, யாழ். பிறவுண் வீதி, அரசடி வீதி, புகையிரதக் கடவையிலிருந்து தட்டாதெருச் சந்தி வரை, கே. கே. எஸ். வீதி நாச்சிமார் கோவிலிலிருந்து சிவன் கோவில் வரை, நாவலர் வீதியில் ஐந்து சந்தியிலிருந்து ஸ்ரான்லி வீதிச் சந்தி வரை, மானிப்பாய் வீதியில் ஓட்டு மடம் சந்தியிலிருந்து கே. கே. எஸ். வீதி வரை, அசாத் வீதி, வீ.ஏ. தம்பி லேன், பிரப்பங் குளம் வீதி, பொன்னப்பா வீதி, சிவலிங்கப் புளியடி, கன்னாதிட்டி, மணிக்கூட்டு வீதி,, சிவன் பண்ணை வீதி, காதி அபூபக்கர் வீதி, கம்பஸ் லேன், தொழில்நுட்பக் கல்லூரி, பல்கலைக் கழகக் கல்லூரி, ஹரிகணன் அச்சகம் பிறைவேற் லிமிற்றேட், அண்ணாமலையான் சிறி இராகவேந்திரா என்ர பிறைசஸ் லிமிற்றேட், வியாபார அபிவிருத்தி முகாமையாளர் பி.எல்.சி அலுவலகம் ஆகிய இடங்களில் இவ்வாறு மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: