குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய 20 விசேட பொலிஸ் குழுக்கள் – பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவிப்பு!
Monday, April 1st, 2024நாடளாவிய ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய 20 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றவாளிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளுக்காக சுமார் 100 அதிகாரிகளைக் கொண்ட மோட்டார் சைக்கிள் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேல் மாகாணம் மற்றும் காலி மாவட்டத்திற்கு இந்த பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேசிய சிறுவர் தின வைபவம் - ஜனாதிபதி பிரதமர் தலைமையில் இன்று!
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானப்படை விமானம் – விமானிகளுக்க பாதிப்பில்லை என விமானப்படை பேச்சாளர் தெரிவ...
இலங்கையின் வீட்டு வாடகை சட்டத்தில் திருத்தம் - நீதி அமைச்சு முன்வைத்த முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங...
|
|