இரண்டாம் தவணையிலிருந்து மாணவர்களுக்கு காப்புறுதி – வடக்கு கல்விச் செயலர் அறிவிப்பு!

Tuesday, April 18th, 2017

இரண்­டாம் தவணை ஆரம்­பத்­தி­லி­ருந்து, பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான 2 இலட்­சம் ரூபா பெறுமதியி­லான காப்­பு­று­தித் திட்­டம் நடை­     மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் செய­லா­ளர் இ.இர­வீந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

கொழும்பு அர­சின் வரவு செல­வுத் திட்­டத்­தில் முன்மொ­ழி ­யப்­பட்ட திட்­டமே இவ்­வாறு செய­லு­றுப் பெற­வுள்­ளது.“பாட­சாலை மாண­வர்­கள் அனை­வ­ரும் இந்­தத்திட்­டத்துக்­குள் உள்வாங்கப்படுவார்கள். மாண­ வர்­க­ளுக்­கான காப்­பு­று­திப் பணம் தின­மும் ஒரு ரூபா செலுத்­தப்­பட வேண்­டும்.

இவ்­வாறு செலுத்­தும் ஒரு ரூபா பாட­சாலை நாள்­க­ளுக்கு மட்­டுமா? அல்­லது தினம்­தோ­றுமா? என்பது போன்ற விவ­ரங்­கள் எதிர்­வ­ரும் வாரம் அமைச்­சால் முழு­மை­யான சுற்­ற­றிக்கை மூலம் பாட­சாலை அதி­பர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­ப­டும்” என்று வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் செய­லா­ளர் மேலும் தெரி­வித்­தார்.

Related posts: