யாழ். கல்லுண்டாயில் பேருந்து விபத்து – 24 பேர் வைத்தியசாலையில்!

Thursday, August 12th, 2021

யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றுகாலை 7.30 மணியளவில் கல்லண்டாய் புதிய குடியிரப்ப பகுதிக்கண்மையில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து தனியார் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்ததில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற வீதியில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், மழை நிலவிய காலப்பகுதியில் அவ்வீதியூடாக குறித்த பேருந்து வேகமாக பயணித்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசாரது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மன உளைச்சலே பெறுபேற்று வீழ்ச்சிக்கு காரணம் - இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஸ்டாலின் தெரிவிப்பு!
வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்...
பிரிவினையை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கூட்டு இணக்கப்பாட்டுடன் செயற்படுங்க...