யாழ்ப்பாண வீதிகளில் பரவி காணப்படும் குப்பைகளால் மக்கள் அவதி!

Wednesday, June 27th, 2018

யாழ்ப்பாண நகரத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் உள்ள குப்பைகள் உரிய நேரத்தில் அகற்றப்படாமையினால் வீதிகளில் பரவி காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குப்பைகள் தரம் பிரித்து பொதுமக்களால் போடப்படுகின்ற போதும் விலங்குகளால் குப்பைகள் வீதிகளின் நடுவில் மற்றும் பொது இடங்களில் இழுத்து செல்லப்படுகின்றன.

இதனால் பலரும் சுகாதார பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். ஆகவே இது தொடர்பில் உரியவர்கள் இறுக்கமான நடைமுறையினை பின்பற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேபோன்று குடாநாட்டின் கரையோரப்பகுதிகளிலும் அதிகளவான குப்பைகள் காணப்படுகின்றது. இதனை மக்களின் ஒத்துழைப்புடன் அகற்ற முடியும் என்று மாநகர சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related posts: