யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு 175 க்கும் மேற்பட்டோர் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு – வைத்தியர் அதிர்ச்சி தகவல்!
Friday, June 9th, 2023இளம் தலைமுறையினருக்கு பொழுது போக்குகளும், ஓய்வுள்ள நேரத்தை கழிப்பதற்கான வழிமுறைகள் இன்மையே தற்போது இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு காரணம் என வைத்திய கலாநிதி சிவதாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்று வரும் கலந்துரையாடலில் இவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
போதைப்பொருளைத் தடுப்பதற்கு ஆறுதிருமுருகன் போன்றோர் அறிக்கை விடுவதும், வைத்தியர் சத்தியமூர்த்தி போன்றோர் இராணுவம் மற்றும் பொலிசாரை அழைத்து போதைப்பொருட் பாவனையை ஒழிக்கப் போவதாக ஆரம்பித்துவிட்டு காலப்போக்கில் அவர்களில் செயற்பாடுகளை காணமுடிவதில்லை.
முன்னைய காலத்தில் சமூகம் மிகுந்த பலமாக இருந்தாலும் தற்போது காணப்படும் சமூகம் மிகவும் பலவீனமானது. பாடசாலையுடனும் குடும்பத்துடனும் நல்ல இணைப்பிலுள்ள மாணவர்கள் எவ்விதமான பிறழ்வான நடத்தைகளுக்குள்ளும் அகப்படுவதில்லை.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு 175 க்கு மேற்பட்ட தற்கொலைகள் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் பணமும் பெருமளவான நடுத்தரவளவு குடும்பங்களின் பேராசைத் தன்மையுமே பெரும்பாலான பிரச்சினைக்கு வழிவகுக்கின்றது எனச் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது;
000
Related posts:
|
|