நிதி நிறுவன ஊழியர் தாக்குதல் – கர்ப்பிணி பெண் வைத்தியசாலையில் அனுமதி – வவுனியாவில் சம்பவம்!

Monday, July 2nd, 2018

வவுனியா ஹொறாவப் பொத்தானை வீதி இலுப்பையடி சந்திக்கு அருகே நேற்று முன்தினம் நிதிநிறுவன ஊழியர் ஒருவர் கரப்பிணி பெண்ணைத் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து கர்ப்பிணிப்பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள நிதிநிறுவனத்தில் நபரொருவர் வாகனத்திற்கு லீசிங் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக மாதாந்த லீசிங் பணத்தினைச் செலுத்தவில்லை. அதனயைடுத்து வாகனத்தினை பறிமுதல் செய்வதற்கு அனுமதியினைப் பெற்றதாக நான்கு நபர்கள் சென்றுள்ளனர்.

குறித்த வாகனத்தின் உரிமையாளர் நேற்று முன்தினம் மாலை வவுனியா ஹொறாவப் பொத்தானை வீதி இலுப்பையடி சந்திக்கு அருகே வீதியில் வாகனத்தினை தரித்து விட்டு வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்ய சென்றுள்ளார். இதன்போது வாகனத்தினுள் அவரது மனைவியும் (7 மாத கர்ப்பிணி) அரவது உறவினர்களும் இருந்துள்ளனர்.

இதன்போது திடீரென நிதிநிறுவனத்தின் வாகனத்தினை பறிமுதல் செய்யும் ஊழியர் வாகனத்தில் சாரதியின் ஆசனத்தில் ஏறி அமர்ந்துள்ளார்.

திடீரென நபரொருவர் வாகனத்தில் ஏறியதனால் பதற்றமடைந்த வாகனத்தின் முன்பக்கத்தில் சாரதி ஆசனத்திற்கு அருகேயிருந்த வாகன உரிமையாளரின் மனைவி இனந்தெரியாத நபர்களின் அத்துமீறலால் வாகத்தின் திறப்பினை எடுப்பதற்கு முயன்றுள்ளார்.

இதன்போது கர்ப்பிணிப் பெண் மீது நிதிநிறுவனத்தின் ஊழியர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகிய கர்ப்பிணி பெண் சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்தவில்லுவராட்சியின் பணிப்பின் பேரில் குறித்த நிதிநிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வாகன உரிமையாளர் தெரிவிக்கையில்:

நான் வாகனத்திற்ன் லீசிங்கிற்கு உரிய பணத்தினை காசோலையாக வழங்கினேன். பின்னர் காசோலையில் காசு எனக் குறிப்பிட்டுள்ளதாகவும் அவ்விடத்தில் அவர்களது அலுவலகத்தின் பெயர் குறிப்பிட வேண்டுமென குறிப்பிட்டதோடு குறித்த காசோலையை ஏற்றுக்கொள்ள காலம் கடந்துவிட்டது எனத் தெரிவித்தே எனது வாகனத்தினை பறிமுதல் செய்துள்ளனர்.

இருப்பினும் காசோலை மாற்றம் செய்யப்பட்டு நிதிநிறுவனத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. காசோலை மற்றும் பணம் ஆகியவற்றை செலுத்தியதோடு வாகனத்தை நிதி நிறுவனத்தில் ஒப்படைத்து விட்டு மீதமுள்ள பணத்தைச் செலுத்தி விட்டு வாகனத்தை மீளப்பெறுவதாகவும் கூறியுள்ளார்.

அதற்கு நிதி நிறுவன முகாமையாளர் வாகனத்துக்கு எந்த சேதமும் வராது என உறுதியளித்ததாகவும் தெரிவித்தார். இவ்விடயத்தினை விட எனது மனைவி 7 மாத கர்ப்பிணி. அவர் மீது நிதி நிறுவன ஊழியர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

எனது மனைவிக்கு ஏதனும் நடந்தால் யார் பொறுப்பு கூறுவர். எனவே இவ்விடயத்தில் எனது மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பாக பொலிஸார் நீதியான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)

Related posts: