யாழ்ப்பாணத்திற்கு 4 கனரக வாகனங்களில் எடுத்து வரப்பட்ட வெடிபொருட்கள் சுகாதார அதிகாரிகளால் மீண்டும் தென்னிலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டன!

Monday, November 16th, 2020

யாழ்மாவட்டத்திற்காக தீபாவளிப் பண்டிகைக்கு தெற்கில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 பாரஊர்தி பட்டாசுகள் சுகாதார அதிகாரிகளினால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தெற்கில் இருந்து கொரோனா காலத்தில் வருபவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார அதிகாரிகளிற்கு 12 ஆம் திகதி இரவு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீபாவளிப் பண்டிகைக்காக 13 ஆம் திகதி யாழ். நகரில் விற்பனை செய்வதற்காக 4 வாகனங்களில் வெடி எடுத்து வந்த பலர் ஓர் விடுதியில் தங்கி நிற்பதாக தகவல் கிட்டியுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் 4 வாகனங்களில் வெடி எடுத்து வந்தவர்களை இனம்கண்டு உடனடியாக 14 நாட்கள் தனிமைப்படுத்தல் உத்தரவை வழங்கியதனால் மறுநாள் வெடிகள் விற்பனைக்கு விடப்படவில்லை.

இவ்வாறு பட்டாசுகளும் விற்பனை செய்யப்படவில்லை, வாகனங்கள் நீண்ட நாட்களாக தடுப்பதோடு வந்தவர்களும் யாழில் தடுக்கப்படுவதனால் ஏற்படும் இடரும் ஏற்படும் நெருக்கடியும் சுட்டிக்காட்டியதனால் நேற்று மாலை பட்டாசுகளை ஏற்றிவந்த வாகனங்கள் மீண்டும் தெற்கிற்கே திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: