யாழில் யுவதி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை!

Thursday, March 22nd, 2018

யாழ்ப்பாணத்தில் யுவதி ஒருவர் தனது இறப்பிற்கு சட்டத்தரணி ஒருவரே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த நாகேஸ்வரன் கௌசிகா என்ற 23 வயதுடைய யுவதியேயாகும்.

யாழ். மருதடியிலுள்ள தனது நண்பியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்வதற்கு முன்னர் யுவதி எழுதிய கடிதம் ஒன்றை யாழ்.பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த யுவதி கடந்த வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி இருந்தும் வீட்டு சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழகம் செல்லவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை  யாழ். மாவட்ட விழிப்புலனற்றோர் சங்கத்தில் கடமையாற்றி வந்த இந்த யுவதி எழுதியுள்ள கடிதத்தில் “அந்த சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமாக செயற்படுபவர்தான் தனது மரணத்திற்கு காரணம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு ஊழல் தொடர்பான விடயங்களில் குறித்த சட்டத்தரணி தன்னை கட்டாயப்படுத்தி வந்ததுடன், பெரும் தொகையான பணத்தை தான் திருடி விட்டதாக தெரிவித்துஅச்சுறுத்துவதாகவும், இதனால்தான்  இந்த முடிவை தான் எடுத்ததாகவும் யுவதி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் சட்டத்தரணியிடம் விசாரணைகளும்மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related posts: