யாழில் சூடுபிடித்துள்ள மண் சட்டிகளின் வியாபாரம்!
Saturday, July 22nd, 2017யாழ் .குடாநாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை (23) இறந்த தந்தையரை நினைத்து அனுஷ்டிக்கப்படவுள்ள முக்கிய விரதமான ஆடி அமாவாசையை முன்னிட்டு யாழின் பல்வேறு பகுதிகளிலும் மண் சட்டிகளின் வியாபாரம் இன்றைய தினம் சூடு பிடித்துள்ளது.
யாழ். குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தையான திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் நேற்று முதல் மண் சட்டிகளின் வியாபாரம் இடம்பெற்று வருகிற போதும் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே மண் சட்டிகளின் வியாபாரம் சூடு பிடித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.
குறித்த சட்டிகள் தரத்தித்திற்கேற்ப 30 ரூபா, 50 ரூபா, 100 ரூபா, 150 ரூபா எனப் பல்வேறு விலைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
Related posts:
வேலணையில் கிணற்றிலிருந்து குடும்பப் பெண் சடலமாக மீட்பு!
மனித உரிமை மீறப்பட்டிருந்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க தயார் - வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு!
எரிபொருள் விலைகளை அதிகரிப்பதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழிகள் எதுவுமிருக்கவில்லை - அமைச்சர் டலஸ் அல...
|
|