மின்சாரத்தையும் குடிநீரையும் சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!
Thursday, November 5th, 2020மக்கள் மின்சாரத்தையும் குடிநீரையும் சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை மின்சகத்திவள அமைச்சும், நீர்விநியோக சபையும் விடுத்துள்ளன.
மேல் மாகாணத்திலும் நாட்டின் சில இடங்களிலும் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. இதனால் மின்சாரம் மற்றும் நீர் பாவனை அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் மக்கள் நீரையும், மின்சாரத்தையும் சிக்கனமாக பயன்படுத்தாத பட்சத்தில் எதிர்காலத்தில் அவற்றை தடையின்றி விநியோகிப்பதில் சிக்கல் ஏற்டலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறுகைதொழில்களில் கூட்டுறவுச் சங்கங்கள் ஈடுபட வேண்டும் யாழ்.மாவட்ட செயலாளர் தெரிவிப்பு
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுக்கும் எச்சரிக்கை!
விமானிகள் பணிப்புறக்கணிப்பு - விமான சேவைகள் இரத்து!
|
|