உரத்திற்குத் தட்டுப்பாடு – வடக்கு விவசாயிகள் கவலை!
Thursday, November 29th, 2018வடக்கு மாகாண விவசாயிகளுக்கு பெரும்போக செய்கைக்கு தேவையான உரம் இந்தமுறை கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான சந்தர்ப்பத்தில் விவசாய மத்திய நிலையத்தின் ஊடாக தமக்கான உரம் கிடைக்காமை காரணமாக, தாம் தனியார் சந்தைகளில் அவற்றை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடல் பகுதியில் ஏற்பட்ட கடும் காற்று மழை காரணமாக உரத்தை ஏற்றிவரும் கப்பலின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
Related posts:
மாநகரசபைக் கட்டடத்தை ஒப்படைத்தது பொலிஸ்!
கிளி.மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு!
அடுத்த தேர்தலையும் பிரதமர் மஹிந்தவே வழிநடத்துவார் - பிரதமரின் பிரத்தியேக செயலாளர் உறுதி!
|
|