யாழில் எலிக்காய்ச்சலால் மாணவன் இறப்பு!

Thursday, November 29th, 2018

எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவன் சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைச் சேர்ந்த சிவசுதன் தவக்குமரன் (வயது 17) காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார்.

எலிக் காய்ச்சல் என்று அறிமுகப்படுத்தப்படும் லெற்றோ வைரஸ் மாணவனைத் தாக்கியிருக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

Related posts:


தமிழர் அரசியல் உரிமைப்போராட்டத்தை சரியான வழியில் நகர்த்தியவர் டக்ளஸ் தேவானந்தா - ஈ.பி.டி.பியின் ஜேர்...
அதிகரித்துச் செல்லும் கொரோனா அச்சுறுத்தல் ; இலங்கையில் கொரோனா தொற்று ஆறாயிரத்தைக் கடந்தது – இராணுவத்...
இந்திய அரசாங்கம் நிதியுதவி - ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 10,000 வீ...