2020 நாடாளுமன்ற தேர்தல் : முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வெளியாகும் – மஹிந்த தேசப்பிரிய!
Wednesday, July 1st, 2020எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்
வழமையாக தேர்தல் நிறைவடைந்து மாலை 5 மணிமுதல் 6 மணிவரையான காலப்பகுதிக்குள் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
ஆனால் இம்முறை மறுதினம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து ஏற்பட்ட பெரும் இழுபறிகளுக்கு மத்தியில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உறுதி மிக்க கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளில் இலங்கை முன்னேற்றம்!
எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவுக்கு வியஜம்!
இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள இரண்டு வங்கிகளுக்கு அனுமதி?
|
|