மேலும் 1595 முகாமைத்துவ உதவியாளர்களை உள்வாங்க அமைச்சு அனுமதி!

Friday, November 18th, 2016

முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 1595 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் இதற்கு நிதி அமைச்சு அங்கீகாரம் அளித்திருப்பதாகவும் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்களில் நிலவும் முகாமைத்துவ உதவியாளர் சேவையின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு 1595 பேரை சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் கூடுதலான புள்ளிகளை பெற்றவர்கள் இந்த சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்விபரங்கள் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.

1235

Related posts:


திருகோணமலை வரோதயநகர் கந்தையா உள்ளக வீதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் செப்பனிடப்பட்டது...
பாதீட்டினூடாக அரச ஊழியர்களது ஊதிய விவகாரத்திற்கு தீர்வு - நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அ...
அதிகரிக்கின்றது கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை - பொதுமக்களுக்கு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ...