மெனிங் சந்தையுடன் தொடர்புபட்டு இதுவரை பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தாதவர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள் பொலிஸார் கோரிக்கை!

Wednesday, November 11th, 2020

கொழும்பைச் சுற்றியுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிறப்பு அம்பியூலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

அத்துடன் 0113422558 இந்த எண்ணை தொடர்பு கொள்வதன்மூலம் சேவையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெட்டா மெனிங் சந்தையை திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மெனிங் சந்தை தொடர்பாக இதுவரை பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தாத அனைவரும் 0718591551 என்ற எண்ணுக்கு பொலிசாரை தொடர்பு கொண்டு சோதனைகளை மேற்கொள்ளலாம் என்றும் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: