மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் – மாகாண சபை தேர்தல்  தொடர்பில் அமைச்சர் பைஸர்!

Sunday, August 26th, 2018

மாகாண சபைத் தேர்தலை விருப்பு வாக்கு முறைமையில் நடத்தவேண்டுமாயின், நடைமுறையில் உள்ள சட்டத்தை மீள திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுமாயின், அது குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத் தயார் என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

இதேநேரம், மாகாண சபைகள் எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் பதவி விலகியிருக்க வேண்டும் என்றும் ஒன்றிணைந்த எதிரணி குறிப்பிட்டுள்ளது.

ஹோமாகம பிரதேசத்தில்இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்

Related posts: