மூக ஒற்றுமையின்மையே கலாசார சீரழிவுகளுக்கு காரணமாகின்றது – யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம்!
Sunday, May 15th, 2016சமுதாயத்தில் மற்றும் குடும்பங்களுக்குள் ஒற்றுமையின்மையாலே கலாசார சீரழிவுகள் இடம்பெறுகின்றன. இவற்றைத் தடுப்பதற்கு குடும்ப ஒற்றுமையான கலந்துரையாடல் இடம்பெறவேண்டும் என யாழ்.மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார்
பண்டத்தரிப்பு பற்றிமா அன்னை யாத்திரை தல திருவிழாவில் நேற்று கலந்து கொண்டபோதே இதனைத் தெரிவித்தார்
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் கணவன் மனைவிக்கு பிரமாணிக்கமாகவும் மனைவி கணவனுக்குப் பிரமாணிக்கமாகவும் பெற்றோர் பிள்ளைகளுக்கு பிள்ளைகள் பெற்றோருக்கு பிரமாணிக்கமாகவும் இருக்கவேண்டும். இன்று இவை கேள்விக்குள்ளாகியுள்ளன. காரணம் சுயநலம்
திருமணங்கள் இன்று விவாகரத்து ஆகும் நிலை உருவாகியுள்ளது. கணவன் மனைவி பிள்ளைகள், பேரன் பேத்தியான நிலை மாறி தனியான வாழ்க்கை வாழ்கிறார்கள். இது எங்கள் எல்லோருடைய தவறாகும். கூட்டுக்குடும்பமாக இல்லாது தனியாகச் சென்று ஒரு குடும்பத்தில் பிரச்சினை ஒன்று உருவாகும்போது அவர்களை ஒன்றிணைக்காது அவர்களைப் பற்றி இன்னும் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவர்களைப் பிரிக்கும் செயல் அதிகரிக்கிறது
திருமணத்திலும் பிரமாணிக்கம் தவறி வருகிறது. இதற்குக் காரணம் சுயநலம். திருமண பந்தத்தின்போது இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் பிரமாணிக்கமாக இருப்பேன். காலம் செல்ல இதெல்லாம் மறைந்து விடுகின்றது
ஆசிரியன் தனது தொழிலில் பிரமாணிக்கமாக இருக்கின்றானா? பாடசாலைக்குச் சென்றால் எப்போது ரியூசனுக்குச் சென்று உழைக்கலாம் என்று எண்ணிப் பாடசாலையில் படிப்பித்தல் இல்லை
இதேபோல் அர்ப்பண வாழ்விலும் பிரமாணிக்கம் இருக்கிறது. பிறர் தேவை அறிந்து ஏனையவருக்கு உதவி செய்யும் மனம் வேண்டும். இன்றைய வருடம் இரக்கத்தின் ஆண்டாக உள்ளது. பிச்சை வழங்குவதோ காசு கொடுப்பதோ இரக்கமல்ல. மற்றவர்களின் தேவை உணர்ந்து செய்வதே இன்றைய தேவை
இன்றைய சமுதாய சூழலில் கலாசார சீரழிவுகள் நடைபெறுகின்றன. வன்புணர்வு, கொள்ளைகளால் நிறைந்து சிக்கலான வாழ்க்கையாக உள்ளது. இதற்குக்காரணம் குடும்பங்களுக்குள் ஒற்றுமை இல்லை. குடும்பமாக இருந்து கதைப்பதில்லை. கலந்துரையாடுவதில்லை. ஒருவருக்கு விட்டுக் கொடுப்புக்கள் இல்லை. ஒன்றாக இருந்து செபிப்பதில்லை. அதிகாலை 4,5 மணிக்கு புலமைப் பரிசில் பரீட்சைக்காக ரியூசனுக்கு தாயார் தனது பிள்ளையைக் கொண்டு செல்கிறார். ஏன் சிறுவர்களை இத்தகைய கொடுமைகளைச் செய்கிறீர்கள். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் எத்தனையோ பேர் வைத்தியராகி தொழில்நுட்பவியலாளராகி பொறியியலாளராகி முன்னேறியுள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் தப்பான அபிப்பிராயம் இருக்கிறது. சமயங்கள் தமது மதபோதனையில் விசுவாசமாக செயற்பட வேண்டும். இது இல்லை என்றால் சமாதானம் நாட்டுக்கும் கிடைக்காது; எமக்கும் கிடைக்காது என்றா
Related posts:
|
|